உலகம்

ஆபிரிக்கா : ஜாம்பியாவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 8 தொழிலாளர்கள் பலி!

ஜாம்பியா நாட்டின் லுசாகா மாகாணத்தில் சாங்வே மாவட்டத்தில் கட்டிட பணிகளுக்கு தேவையான கற்களை எடுக்கும் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சுரங்கத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் நேற்று காலை பணியை முடித்தபோது, திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில், தொழிலாளர்கள் சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதுபற்றி காவல் துறையின் செய்தி தொடர்பாளர் ரே ஹமூங்கா கூறும்போது, சுரங்கம் இடிந்து விழுந்தது பற்றிய தகவல் அறிந்து பொலிஸார் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

இதில், ஓட்டுநர் ஒருவர் மீட்கப்பட்டார். பகுதியளவு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அவர், நிறைய பேர் உள்ளே சிக்கியுள்ளனர் என கூறியுள்ளார். இந்நிலையில், மீட்பு குழுவினர் 8 பேரின் உடல்களை மீட்டனர். மற்றவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது என கூறியுள்ளனர்.

அந்த பகுதியில் சவாலான சூழல் காணப்பட்டது. இதனால், மீட்பு பணியில் நேற்று தொய்வு நிலை ஏற்பட்டது. மீட்பு பணியும் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று மீட்பு பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!