உலகம்

கண்ணீருடன் ஆறாம் வகுப்பை முடிக்கும் ஆப்கானிஸ்தான் பள்ளி மாணவிகள்.

செப்டம்பர் 2021 இல், அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இரண்டு தசாப்த காலப் போரைத் தொடர்ந்து வெளியேறிய ஒரு மாதத்திற்குப் பிறகு, பெண்கள் ஆறாம் வகுப்பிற்கு மேல் படிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக தலிபான் அறிவித்தது.

அவர்கள் டிசம்பர் 2022 இல் பல்கலைக்கழகங்களுக்கு இந்தக் கல்வித் தடையை நீட்டித்தனர்.

தலிபான்கள் உலகளாவிய கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் மீறி, கட்டுப்பாடுகள் நாட்டின் சட்டபூர்வமான ஆட்சியாளர்களாக அங்கீகாரம் பெறுவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கும்.

கடந்த வாரம், ஐ.நா.வின் சிறப்புத் தூதர் ரோசா ஒடுன்பயேவா, ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் சிறுமிகளின் தலைமுறை பின்தங்கி வருவதாக கவலை தெரிவித்தார்.

இந்நிலையில் காபூல்: ஆப்கனில், ஆளும் தலிபான்களின் ஆட்சியால், ஆறாம் வகுப்புப் படித்து வரும் சிறுமிகள், இதோடு, தாங்கள் பள்ளிக்குத் திரும்பப்போவதில்லை என்று நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

டிசம்பர் மாதத்தோடு, பள்ளிகளில் இறுதியாண்டுத் தேர்வு நடத்தப்பட்டு, விடுமுறை அளிக்கப்படும் என்பதால், காபூலில் உள்ள பிபி ரஸியா பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்த பஹாரா ருஸ்தம் (13), தனது பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கூறுகிறார். இனி ஒருபோதும் அவர் தனது வகுப்பறைக்குத் திரும்பப்போவதில்லை என்பதை நினைத்துக் குமுறுகிறார்.

இந்த நிலையில், மதரசாக்கள் போன்ற மதப் பள்ளிகளில் பெண்கள் படிக்க தடையில்லை என்று ஆப்கன் கல்வித் துஐற அமைச்சகம் அறிவித்திருந்தது. ஆனால் அவற்றில் நவீன பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாங்கள் அனைவரும் ஆறாம் வகுப்பு முடித்துவிட்டோம். அடுத்து ஏழாம் வகுப்பு போக வேண்டும். ஆனால், அது முடியாது. எங்கள் வகுப்பில் பயிலும் சிறுமிகள் அனைவரும் கதறி அழுகிறார்கள்.
இதுபோலவே, மற்றொரு மாணவி, தங்கள் கனவுகள் எல்லாம் இல்லாமல் போய்விட்டது. இனி நாங்கள் எப்போதுமே சொந்தக் காலில் நிற்க முடியாது. எனக்கு ஆசிரியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், இப்போது என்னால் படிக்கவே முடியாது. பள்ளிக்கே செல்ல முடியாது என்ற நிலை என்று சொல்லி கண்ணீர் விடுகிறார்.

ஆப்கனில், பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவது, ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியையே புரட்டிப்போட்டுவிடும் என்று பல்வேறு துறை சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கிறார்கள்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content