பொழுதுபோக்கு

மீண்டும் இரகசிய திருமணம் செய்த வனிதா? விவாகரத்துக்கு வாய்ப்பே இல்லயாம்…..

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை வனிதா, யாருக்கும் தெரியாமல் மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

திருமணத்துக்கும் வனிதாவுக்கும் செட்டே ஆகாமல் இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக பேட்டி ஒன்றில் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் வனிதா.

இது எப்போ என அனைவரும் பதறிப்போக, அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார் வனிதா. அதன்படி, அவர் தற்போது சினிமாவை தான் காதலித்து திருமணம் செய்துள்ளாராம். இனி தன்னுடைய முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கும், அதனால் இனி விவாகரத்திற்கு வாய்ப்பே இல்லை என கூறி இருக்கிறார் வனிதா.

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதாவுக்கு கடந்த 2000-ம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது. அவர் நடிகர் ஆகாஷை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஸ்ரீஹரி என்கிற ஒரு மகனும் உள்ளார். 2007-ம் ஆண்டு ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் வனிதா.

ஆகாஷை பிரிந்த உடனே ஜெய் ராஜன் என்கிற தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா. பின்னர் அவரை அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். இந்த ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

பின்னர் தந்தை விஜயகுமாருடன் பிரச்சனை ஏற்பட்டதால் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வந்தார் வனிதா. அந்த சமயத்தில் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருக்கும் வனிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.

இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட வனிதா, அந்நிகழ்ச்சியில் அதகளம் செய்து டிஆர்பி-யை எகிற வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆன வனிதா மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா. வழக்கம்போல் அவரையும் திருமணமான மூன்றே மாதத்தில் விவாகரத்து செய்து விரட்டிவிட்டார்.

 

(Visited 10 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content