இலங்கை

கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இருவரை நீக்க நடவடிக்கை!

பயங்கரவாதத்தை ஆதரித்ததற்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரை அந்த பட்டியலில் நீக்க பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று (23.10) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ரமேஷ் என்ற அந்தோணி எமில் லட்சுமி கந்தன் என்ற நபரை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரும் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், முருகேசு ஸ்ரீ சண்முகராஜா என்பவரையும்கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

2014ஆம் ஆண்டு முதல் இருவரும் பயங்கரவாதத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்