ஆஸ்திரேலியாவில் புதிதாக 40,000க்கும் அதிகமான வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை

McDonald’s உணவகச் சங்கிலி அடுத்த 03 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட புதிய உணவகங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள உணவகங்களும் மேம்படுத்தப்படும்.
இந்த முழு திட்டத்திற்கும் ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்ய அவர்கள் தயாராக உள்ளனர்.
1990களுக்குப் பிறகு எந்த நாட்டிலும் மெக்டொனால்டு உணவகச் சங்கிலியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முதலீட்டுத் திட்டம் இதுவாகும் என்று கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் செயல்படும் மெக்டொனால்டு உணவகங்களின் எண்ணிக்கை 1,100ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 40,000க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
(Visited 15 times, 1 visits today)