ஆசியா

சிங்கப்பூரில் அதிரடி சோதனை – 500க்கும் அதிகமானோரை சுற்றிவளைத்த பொலிஸார்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் சுமார் 500க்கும் அதிமானோர் விசாரணையில் உள்ளனர்.

சிங்கப்பூரில் 10 நாள் நடந்த அதிரடி சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர் என்றும், இதில் சுமார் 14.3 மில்லியன் டொலர் மோசடி நடந்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கள்ளப்பணத்தை நல்லபணமாக மாற்றியது மற்றும் மோசடி செய்தது உள்ளிட்ட 2,600 க்கும் மேற்பட்ட குற்றங்களில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதில் 340 ஆண்கள் மற்றும் 168 பெண்கள் அடங்குவர், அவர்கள் 14 முதல் 71 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். அதில் மின்னணு வணிக மோசடி, முதலீடு, வேலைவாய்ப்பு, தொழில்நுட்ப ஆதரவு, குறுஞ்செய்தி மோசடி ஆகியவை அடங்கும்.

மேலும் 148 பேர் கடன் மோசடிகளில் ஈடுபட்டதாகவும், கடன் முதலை தொடர்பில் 300,000 டொலருக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content