உலகம்

மேற்கத்தேய நாடுகளின் நடவடிக்கை – ஈரானில் மரண தண்டனை நிறுத்திவைப்பு!

ஈரானில் மரணதண்டனை நிறைவேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

முன்னதாக பாதுகாப்புப் படையினரால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், “உதவி வந்து கொண்டிருக்கிறது” என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இதற்கிடையே இங்கிலாந்து தனது தெஹ்ரான் தூதரகத்தை மூடிவிட்டு ஊழியர்களை திரும்பப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் போலந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அமைதியின்மை காரணமாக தங்கள் குடிமக்களை ஈரானை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தின.

கத்தாரில் உள்ள இராணுவத் தளங்களில்  உள்ள பணியாளர்களை அமெரிக்கா குறைத்து வருகிறது. அதேபோல் இங்கிலாந்தும் தங்கள் பணியாளர்களைக் குறைத்து வருகின்றது.

இந்நிலையில் மரணதண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!