இலங்கை

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் காவலாளியை கொலை செய்த குற்றவாளி கைது

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியைக் கொலை செய்து உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்ற சந்தேகநபர் சம்மாந்துறை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் நேற்று (19) இரவு சம்மாந்துறை நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த வேளையில் கைது செய்யப்பட்டமை குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதாக ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.

சந்தேகநபர் ஹட்டன் பிரதேசத்தில் பல நாட்களாக தங்கியிருந்து கடந்த 09 ஆம் திகதி அதிகாலை ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியைக் கொன்றுவிட்டு உண்டியலை உடைத்து பணத்தினை எடுத்துச் சென்றுள்ளார்.சந்தேக நபரின் புகைப்படங்கள் ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டதுடன், ஹட்டன் பொலிஸார் அவர் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்தனர்.

சந்தேகநபர் சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பல கொலைச் சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கொலை சம்பம் ஒன்று தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறையிலிருந்து தப்பிச் சென்றவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content