பிக்பாஸ் 9-வது சீசனில் நடக்கப்போகும் புதிய மாற்றம்…
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது.
8-வது சீசனை தொகுத்து வழங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் இம்முறையும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.
இந்நிலையில், புத்தம் புது ரூல்ஸ் இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ரூல்ஸ் 01
இந்த மாஸ் எலிமினேஷன் மூலம் ஒரே நேரத்தில் மூன்று, நான்கு போட்டியாளர்கள் கூண்டோடு எலிமினேட் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதாம்.
ரூல்ஸ் 02
பிக் பாஸ் வீட்டில் நடத்தப்படும் டாஸ்க்கில் ஆடியன்ஸ் தங்களுக்கு பிடித்த நபருக்கு வாக்கு செலுத்தலாம். இறுதியில் யாருக்கு அதிக வாக்கு கிடைத்திருக்கிறதோ அந்த நபருக்கு டாஸ்கில் அட்வாண்டேஜ் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
ரூல்ஸ் 03
9-வது சீசனில் மாஸ் எலிமினேஷன் நடைபெற இருப்பதால் அதில் சிலர் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்குள் அனுப்பப்படவும் வாய்ப்பு இருக்கிறது.





