இலங்கை

தொழிலுக்காக இஸ்ரேல் சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம்!

இஸ்ரேலில் பணிப்புரிந்து வந்த இலங்கை பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியை சொந்த இடமாக கொண்ட 38 வயதான இளைஞர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமானத் தொழிலாளராக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார். அரசாங்கத்தின் வேலை வாய்ப்பின் பேரில் அவர் இஸ்ரேல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மரணம் குறித்து இஸ்ரேல் காவல்துறையின் இன்டர்போல் கிளை தற்போது விசாரித்து வருவதாகவும் நிமல் பண்டார மேலும் கூறியுள்ளார்.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!