இலங்கை

கொத்மலை நீர்த்தேகத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

தலவாக்கலை கொத்மலை நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்குமிஸ் தோட்டத்தின் கீழ் பகுதியில் வசித்து வந்த 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் அதே தோட்டத்தில் வசிக்கும் மேலும் இரு இளைஞர்களுடன் வால்ட்ரிம் தோட்டத்திற்குச் சொந்தமான காப்புக்காட்டில் மரம் வெட்டச் சென்றுள்ளதுடன், பின்னர் அனைவரும் ஒன்றாக நீராடுவதற்காக ஓடையில் இறங்கியதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அங்கு நீராடிக் கொண்டிருந்த இளைஞன் நீரோடையில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், காணாமல் போன இளைஞனின் சடலம் பிரதேசவாசிகள் மற்றும் லிந்துலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!