இலங்கை

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

புத்தளம் – முந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமட்டாவ பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முந்தல் – அக்கர 60 கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் – கீரிமட்டாவ பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த வீதியோர மின்விளக்குகளை பொருந்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞன் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த இளைஞன் ஏணி ஒன்றின் மூலம் மின்சாரத் தூணில் ஏறி மின்குமிழை பொருத்திக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனையடுத்து, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளைஞனை அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்