தமிழ்நாடு

ரத்தம் வழிந்த கத்தியோடு சாலையில் அலறிபடி ஓடி வந்த வாலிபர்..!

நான் கொலை செய்து விட்டேன்’ என்று ரத்தம் வழிந்த கத்தியோடு சாலையில் அலறி கத்திய வாலிபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் கொளஞ்சி (45). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் அவினாஷ் (22). இவரும் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக கொளஞ்சியும், அவினாஷும் சேர்ந்து கட்டிட வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு தரமணியில் உள்ள லிங்க் ரோடு அருகே அவினாஷ் கையில் கத்தியை வைத்துக் கொண்டு அலறி கத்தினார். ‘நான் ஒருத்தனை கொலைசெய்து விட்டேன்’ என்று கத்தி கூச்சல் போட்டார்.

அந்த வழியாக வந்தவர்கள் இவர் கத்துவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அவினாஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, அவினாஷிடம் நடத்திய விசாரணையில், நேற்று இரவு அபினாஷும், கொளஞ்சியும் ஒரே அறையில் மது குடித்துள்ளனர்.அப்போது, அபினாஷைப் பார்த்து கொளஞ்சி ஏய்… நீ ஓரினச் சேர்க்கையாளன் தானே என்று அவினாஷை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார். ஆனால், அவினாஷ் ஓரிசனச் சேர்க்கைக்கு வர மறுத்துள்ளார்.

இதனையடுத்து, கெளஞ்சி அவினாஷை கேலி, கிண்டல் செய்துள்ளார். நேற்று இரவு முழுவதும் கொளஞ்சி அவினாஷை தொந்தரவு செய்து ஆபாசமாக பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவினாஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கொளஞ்சியை குத்தினார்.

ரத்தம் சொட்ட சொட்ட கொளஞ்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்ததை எண்ணி பயந்துபோன அவினாஷ் சாலையில் வந்து கதறி கத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த பொலிஸார் அவினாஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!