இந்தியா வட அமெரிக்கா

அமெரிக்க முன்னால் ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி

இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா இதனை கூறினார்.

பிரதமர் மோடியுடன் தான் உரையாடியிருந்தால் இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை தாங்கள் பாதுகாக்கவில்லை என்று கூறியிருப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பிரதமருடனான தனது சந்தித்திப்பின் போது வாதத்தின் ஒரு பகுதியாக சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து இருந்திருக்கும் எனக்கூறிய ஓபாமா, இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபட அதிகம் வாய்ப்புள்ளதாக உள்ளதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கும் பைடன் இந்தியாவில் இஸ்லாமிய சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும் என்று ஓபாமா வலியுறுத்தினார்.

(Visited 12 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content