இலங்கை

இலங்கையின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, உடபலாத்த மற்றும் மெததும்பர ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குருநாகல் மாவட்டத்தின் மாவத்கம மற்றும் பொல்கஹவெல, மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல அம்பன்கங்க கோரலே மற்றும் லக்கல பல்லேகம ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் ஹகுரன்கெத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவானை மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்