ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை

ராஜஸ்தானின் தௌசாவில் உள்ள பாண்ட்குய் நகரில் இரண்டரை வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழிக்குள் சுமார் 35 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நிர்வாகம் சிறுமியை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஜேசிபி மூலம் தோண்டும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மழை காரணமாக மீட்பு பணி சவாலை எதிர்கொள்கிறது என்றார். “சிறுமிக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
சிறுமி தனது வீட்டிற்கு அருகிலுள்ள பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த போது அவள் ஒரு மூலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தாள்.
குழிக்குள் கேமரா பொருத்தப்பட்டு குழாய் மூலம் குழந்தைக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
(Visited 17 times, 1 visits today)