வெளிநாடு ஒன்றில் தமிழ் இளைஞர் ஒருவர் மாயம்!

அவுஸ்ரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திஷாந்தன் என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக அவர் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியில் இருந்தாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 16 times, 1 visits today)