ஆசியா

சிங்கப்பூர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

சிங்கப்பூரில் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு உதவி நாடி வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் அத்தகைய சேவைகளை வழங்கும் மருந்தகங்கள் கூறியுள்ளன.

எனினும் மின்-சிகரெட்டுகளின் புழக்கம் தங்களின் முயற்சியைச் சில நேரங்களில் குலைத்துவிடுகிறது என்று அவை தெரிவித்தன. புகைபிடிப்பவர்களுக்கு நுரையீரலில் மோசமான கோளாறுகள் ஏற்படலாம்.

அத்தகையோரில் சிலர் சிகிச்சையின்வழி குணப்படுத்தப்படுகின்றனர். புகைக்கும் பழக்கத்திற்கு மீண்டும் அடிமையாகாமல் இருக்க மருந்தகங்கள் உதவித் திட்டங்களை ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு தயார்செய்து கொடுக்கிறது.

ஆனால் மின்-சிகரெட்டுகளின் புழக்கம் அந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. மின்-சிகரெட்டுகளை வைத்திருப்பதும் பயன்படுத்துவதும் சட்ட விரோதம் என்பதால் பலர் அது குறித்து வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
விளம்பரம்

நிக்கோட்டின் ரசாயனத்தின் அளவு ஒவ்வொரு மின்-சிகரெட்டுக்கும் வேறுபடும். தங்களுக்கு விருப்பமான அளவில் அதிலிருக்கும் நிக்கோட்டினை உள்ளிழுத்துக்கொள்ளவும் ஒருவரால் முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதனால் புகைபிடிப்பதைவிட மின்-சிகரெட்டுகளைக் கைவிடுவது இன்னும் கடினம் என்கின்றனர் மருத்துவர்கள்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content