இலங்கை

சாய்ந்தமருதில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன் ஒருவரின் சடலம் மீட்பு!

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மத்ரஸா பாடசாலை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த எம். எஸ். முஷாப் என்ற 13 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நேற்றிரவு (05.12) பிரதேசவாசிகள் மதரஸா பாடசாலையை முற்றுகையிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த மத்ரஸா பாடசாலையின் முகாமையாளரை கைதுசெய்துள்ளனர்.

இந்த மரணத்தால் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!