ஐரோப்பா

நிஜத்தில் ஒரு ஸ்பைடர் மேன் : 140 வருடங்கள் பழமையான பாலத்தின் மீது அசால்டாக ஏரிய நபர்!

36 வயதான மார்சின் பானோட், புவியீர்ப்பு விசையை மீறி ஏறுவதில் புகழ் பெற்றார். உதவியின்றி உலகின் மிக உயரமான கட்டிடங்களில் சிலவற்றை அசாதாரணமாக ஏரி சாதனை படைத்துள்ளார்.

போலந்து நாட்டில் பிறந்த பானோட், லண்டனில் உள்ள ஷார்ட் மற்றும் பாரிஸின் ஈபிள் டவர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற அடையாளங்களின் உச்சிக்கு எவ்வித உதவி பொருட்களும் இன்றி ஏரி சாதனை புரிந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர், போர்ச்சுகலின் டோம் லூயிஸ் I பாலத்தின் மீது ஏரியுள்ளார். இது நாட்டின் தலைநகரான போர்டோவில் உள்ள டூரோ ஆற்றைக் கடக்கிறது.

அவர் 140 ஆண்டுகள் பழமையான கட்டமைப்பை மிக வேகமாக ஏரியுள்ளார். ஆற்றைக் கடக்கும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் அவர் மேலே வரும் வரை அவரைக் கவனிக்கவில்லை என்றே கூறுகின்றனர்.

ஏறுபவர் ஒரு கோபுரத்தின் உச்சியில் இருந்து வெளியே வருவதைப் படங்கள் காட்டுகின்றன. போர்டோ காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் அன்டோனியோ வீகா, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிடப்பட்டபோதுதான் தங்களுக்குத் தெரியவந்தது எனக் கூறியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!