இலங்கை

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை

எல்லை தாண்டி ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இரண்டு இலங்கை பெண்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் மீண்டும் ஜோர்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் எல்லையை கடந்து வேறு நாட்டுக்கு செல்வது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டாகும் எனவும் அது தவறான நடத்தை எனவும் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான யுத்த சூழ்நிலையில் நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்லும் போது அவர்களை பயங்கரவாதிகளாக கருதி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாட்டில் உங்களுக்காக யாரும் முன்னிலையாக மாட்டார்கள் என்றும் காமினி செனரத் யாப்பா வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்த வகையிலும் தலையிடாது என அவர் குறிப்பிடுகின்றார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content