இலங்கை செய்தி

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான விஷேட அறிவிப்பு

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்வரும் பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகள் இன்றைய தினம் (19.12.2023) இயங்காது என்பதனை முல்லைத்தீவு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவித்துள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு

1 மு/மன்னகண்டல் அ.த.க.பாடசாலை
2 மு/இருட்டுமடு தமிழ் வித்யாலயம்
3 மு/நெத்தலியாறு ஆரம்பப் பாடசாலை

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு

1.மு/கருவேலன்கண்டல் அ.த.க.பாடசாலை
2.மு/கூழாமுறிப்பு அ.த.க.பாடசாலை
3.மு/முத்துவிநாயகபுரம் மகாவித்தியாலயம்
4.மு/பேராறு அ.த.க.பாடசாலை
5.பண்டாரவன்னியன் மகா வித்தியாலயம் (கற்சிலைமடு)

ஆகிய பாடசாலைகள் நாளையதினம் இயங்காது என மாவட்டச் செயலாளர்,மாவட்ட செயலகம், முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு முல்லைத்தீவு பரந்தன் வீதியில் விசுவமடு மாணிக்க பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள வீதியை குறுக்கறுத்து வெள்ள நீர் பாய்ந்து கொண்டிருக்கின்றது. எனவே இதனால் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!