இலங்கை

இந்தியாவில் இருந்து இலங்கை வரும் கப்பல்! கடற்படை பேச்சாளர்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி,பேசாலை நடுக்குடா கடற்கரை பகுதியில் நேற்று கரை தட்டிய கப்பல் மற்றும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை (8) மாலை வருகை தர உள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மாலைதீவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கி கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு வந்த கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (7) மாலை கரை தட்டி உள்ளது.

இதன் போது குறித்த கப்பலில் 11 பணியாளர்கள் இருந்ததாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் குறித்து இந்தியாவின் கப்பல் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும்,கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கமைவாக குறித்த நிறுவனமும் கடற்படையும்,சமுத்திரவியல் சேவை மற்றும் மீட்புப் பணியகம் ஆகியவை இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை கொண்டு சென்ற பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி மீண்டும் கப்பல் ஒன்றின் மூலம் இந்தியாவை நோக்கி கொண்டு சென்ற போதே இலங்கை கடற்பரப்பில் கரை தட்டியது.

87 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கொள்கலன் தாங்கி எந்த வித பொருட்களும் அற்ற நிலையில் கப்பல் மூலம் இழுத்து வரப்பட்டது.

இதன் போது கடல் பிராந்தியத்தில் வீசிய கடும் காற்று,அலையின் சீற்றம் காரணமாக குறித்த கப்பல் மற்றும் கொள்கலன் தாங்கி ஆகியவை இலங்கை கடற்பரப்பை நோக்கி இழுத்து வரப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் 87 மீற்றர் நீளம் கொண்ட கொள்கலன் ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்திய கப்பல் ஒன்று இன்று மாலை இலங்கையை வந்தடைய உள்ளது.

குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்த பின்னரே எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தீர்மானிக்கலாம் என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்