ஐரோப்பிய நாடுகளை தாக்கிய சக்திவாய்ந்த புயல் : நால்வர் உயிரிழப்பு!

பிரிட்டன், வடக்கு ஜெர்மனி மற்றும் தெற்கு ஸ்காண்டிநேவியாவில் இன்று (21.10) காலை புயல் தாக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த புயல் காரணமாக கனமழை பெய்ததுடன், மின் தடை, விமானங்கள் ரத்து என பலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் பாபெட் என்று பெயரிடப்பட்ட புயல் காரணமாக குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)