ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளை தாக்கிய சக்திவாய்ந்த புயல் : நால்வர் உயிரிழப்பு!

பிரிட்டன், வடக்கு ஜெர்மனி மற்றும் தெற்கு ஸ்காண்டிநேவியாவில் இன்று (21.10) காலை புயல் தாக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த புயல் காரணமாக கனமழை பெய்ததுடன், மின் தடை, விமானங்கள் ரத்து என பலப் பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் பாபெட் என்று பெயரிடப்பட்ட புயல் காரணமாக குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!