உலகம்

தென் பசுபிக் பெருங்கடலின் அருகில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென் பசுபிக் பெருங்கடலின் அருகே உள்ள டோங்கா பகுதிக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவில் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டோங்காவின் தென்மேற்கு பகுதியில் 280 கி.மீ தொலைவில் 167.4 கி.மீ ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல் அவுஸ்ரேலியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. நிலநடுக்கங்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

இதேவேளை ஃபிஜி தீவுகளின் தொற்கு பகுதியில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கம் மையம் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!