ஐரோப்பா

நெதர்லாந்தில் விமான எஞ்சினில் சிக்கிய நபர் பரிதாபமாக உயிரிழப்பு!

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமின் பிரதான விமான நிலையத்தில் விமானத்தின் இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஷிபோல் விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிக்கொண்டிருந்த KLM Cityhopper Embraer E190 இன் எஞ்சினில் அந்த நபர் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் பயணிகள் மற்றும் பணியாளர்கள் இந்த துயர மரணத்தை கண்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பயணியா அல்லது விமான ஊழியரா என்பது தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

KLM Cityhopper Embraer E190 டென்மார்க்கிற்குப் புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் ஸ்டாண்டில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டபோது குறித்த நபர் எஞ்சினில் சிக்கியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

(Visited 22 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!