இலங்கை செய்தி

சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்

மீரிகம, தங்கொவிட்ட வீதியில் வீடொன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போது அருகில் இருந்த பக்கச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிக்கிய ஒருவர் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் மீரிகம, தவலம்பிட்டிய இலக்கம் 120 ஐச் சேர்ந்த மைக்கல் ரத்நாயக்க (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் வீடொன்றை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் வீட்டின் பின்புறமாக அமைக்கப்பட்டிருந்த பக்கச்சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அவரது தலையில் பாரிய காயம் ஏற்பட்டிருந்ததுடன், உள்ளூர்வாசிகளின் உதவியுடன், நபரை மீட்டு மீரிகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!