செய்தி

சீனாவில் நின்ற இடத்தில் இருந்து வானில் எழும்பும் புதிய ரக மின்சார விமானம்

சீனாவில் மின்சார விமானத்தை பொது போக்குவரத்துக்கு பயன்படுத்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஓடு பாதையில் ஓடி மேலே கிளம்புவதற்கு பதில் நின்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் போல மேலே எழும்பும் வகையில் இது அமைந்துள்ளது.

பிராஸ்பெரிட்டி என பெயரிடப்பட்டுள்ள அந்த விமானத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கலாம் என அதை வடிவமைத்த ஆட்டோ ஃபிளைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 பேர் பயணிக்கக்கூடிய இந்த சிறிய வகை மின்சார விமானத்தை கூட்ட நெரிசலான பகுதிகளில் இருந்து கூட எளிதில் புறப்பட வைக்க முடியும்.

வழக்கமான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை விட இவற்றின் பராமரிப்பு செலவு குறைவு எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!