இலங்கை செய்தி

“ இலங்கை அரசியலில் தேசிய தலைவர் ஒருவர் உருவாகவில்லை”

இலங்கையில் அரசியல் தலைவர்கள் இருந்தாலும், தேசிய தலைவர் இல்லை என்று எல்லே குணவங்க தேரர் Elle Gunavanga Thero தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மெலும் கூறியவை வருமாறு,

“ இலங்கைக்குரிய கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாத்து வந்துள்ளோம். எனவே, எமது நாட்டு கலாசாரத்தில் கைவைப்பதற்கு எவரும் முற்படக்கூடாது.

எமது நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். எமக்கு அரசியல் தலைவர்கள் இருந்தாலும், தேசிய தலைவர் ஒருவர் இன்னும் இல்லை.

இலங்கையல் அநகாரிக தர்மபாலவுக்கு பிறகு இன்னும்
தேசிய தலைவர் ஒருவர் உருவாகவில்லை. இந்தியாவில் மகாத்மா காந்தி மற்றும் நேரு போன்றவர்கள் தொடர்பில் கற்கும்போது எமக்கு கண்ணீர் வரும்.

இலங்கை அரசியலில் அப்படியொரு தலைவரை இன்னும் அடையாளம் காணமுடியாதுள்ளது. இலங்கையென்பது உன்னதமான நாடாகும். இதனை நாம் பாதுகாக்க வேண்டும்.” – என்றார் எல்லே குணவங்க தேரர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!