இலங்கை

நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஏழு பிள்ளைகளின் தாய்

வீட்டில் இருந்து காணாமல் போன ஏழு பிள்ளைகளின் தாயின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (17) மீட்டெடுக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் வென்சர் தோட்டத்தில் வசித்து வந்த ஏழு பிள்ளைகளின் தாயான பெருமாள் ராகம்மா (82) என்பவரின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்துள்ளது.

வென்சர் தோட்டத்தின் கீழ் பகுதியில் உள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீரேந்தி செல்லும் கெசல்கமுஓயாவிற்கு அருகில் உள்ள, தனது வீட்டில் வசித்து வந்தவரைகடந்த 10 ஆம் முதல் காணவில்லை என நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலம் நோர்வூட் மரண விசாரணை அதிகாரி நடராஜா ரவிக்குமார் முன்னிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது. பிரேத பரிசோத​னைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!