இந்தியாவில் உணவகத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து : 06 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி குறைந்தது 06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
உணவகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை கொண்டு குறித்த தீ கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உணவகத்தில் இருந்த 40 பேரை மீட்பு பணியாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 14 times, 1 visits today)