ஐரோப்பா

ஜேர்மனியில் குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ : மூவர் பலி!

மேற்கு ஜேர்மனியில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

டுசெல்டார்ஃப் நகரில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடி வருவதுடன், ஏணிகளைப் பயன்படுத்தி பால்கனியில் இருந்து பலரைக் காப்பாற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

16 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 22 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!