இலங்கை

இலங்கையில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை கடத்த முயற்சித்த நபரால் பரபரப்பு!

இலங்கையில் பலாத்காரமாக வீட்டினுள் நுழைந்த நபர் ஒருவர் வீட்டில் வசிந்து வந்தவர்களை பயமுறுத்தி அங்குள்ள யுவதி ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் ஒன்று வலஸ்முல்லவில் இருந்து பதிவாகியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரேவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (07) இரவு குறித்த சந்தேகநபர் நுழைந்து அங்குள்ளவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி யுவதி ஒருவரை கடத்த முற்பட்டுள்ளதாக 119 அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், 02 நாட்டுத் துப்பாக்கிகள், 02 தடைசெய்யப்பட்ட கத்திகள், இரும்பு கம்பிகள் மற்றும் இரும்புத் துண்டுகள் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெனியாய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவராவார்.

சந்தேகநபர் குறித்த சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த உறவில் ஏற்பட்ட முரண்பாட்டால் மேற்படி நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!