Site icon Tamil News

தலைக்கவசத்தால் நண்பனை தாக்கி கொலை செய்த நபர்

மினுவாங்கொடையில் நண்பனை தலைக்கவசத்தால் தாக்கி நேற்று (7) கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அத்தோடு அந் நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மது அருந்தும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தினாலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரம்பெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அஸ்வென்ன வத்த பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version