செய்தி வட அமெரிக்கா

கனடாவில் திடீரென விமானத்தில் இருந்து குதித்த நபரால் பரபரப்பு

விமானத்தில் இருந்து பயணி ஒருவர் குதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லவிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தில் இருந்து குதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தில் இருந்த பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்தனர் ஆனால் ஒரு பயணி மட்டும் இருக்கையில் அமராமல் திடீரென விமானத்தின் கதவை திறந்து கீழே குதித்தார்.

குறித்த நபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளதாகவும், பொலிசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று அந்த நபரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் ஏன் விமானத்தில் இருந்து குதித்தார் என்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், இந்த சம்பவத்தினால் துபாய் செல்லும் விமானம் 6 மணிநேரம் தாமதமாக புறப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!