Site icon Tamil News

ரோமில் வீதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த சிங்கம்

ரோமில் உள்ள லடிஸ்போலி நகரில் சிங்கம் ஒன்று சுதந்திரமாக சுற்றித் திரிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரவில் சிங்கம் ஊரில் சுற்றித் திரிவதை நகரவாசிகள் கையடக்க தெலைபேசியில் பதிவு செய்துள்ளனர்.

இந்த சிங்கம் சர்க்கஸ் குழுவைச் சேர்ந்தது என்பதும், சர்க்கஸ் குழுவிடம் இருந்து தப்பி 05 மணி நேரத்திற்கும் மேலாக ஊருக்குள் சுற்றித் திரிந்ததும் பின்னர் தெரியவந்தது.

பின்னர், சிங்கம் பிடிக்கப்பட்டு சர்க்கஸ் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பல மணி நேரம் சுதந்திரமாக இருந்த சிங்கம் எந்த ஆபத்தும் இன்றி மீட்கப்பட்டதாக சர்க்கஸ் குழுவின் காப்பாளர் தெரிவித்தார்.

கூண்டில் இருந்து சிங்கம் எப்படி தப்பித்தது என்பது குறித்து சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version