ஐரோப்பா

ஸ்பெயினில் திடீரென தீப்பிடித்த ஹொட்டல் ; இருவர் பலி

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியானதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இத்தாலிய உணவகமான Burro Canaglia Bar & Resto என்ற உணவகம், தலைநகர் மாட்ரிட்டில் அமைந்துள்ளது.

இந்த உணவகத்தில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அலறிய வாடிக்கையாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற முயற்சித்துள்ளனர்.ஆனால், வெளியேறும் வழிக்கு அருகிலேயே தீப்பிடித்திருந்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் இருவர் பரிதாபமாக பலியானதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் அவசர சேவை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பணியாளர் ஒருவர் இச்சம்பவம் குறித்து El Pais செய்தித்தாளிடம் கூறுகையில், ஒரு பாத்திரத்தில் உணவை சமைக்க எரியூட்டியபோது எதிர்ப்பாராத விதமாக தீப்பற்றியதாகவும், பின்னர் தீப்பிழம்புகள் கூரை மற்றும் சுவர்கள் மீது பரவியதாகவும் தெரிவித்தார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content