இலங்கை செய்தி

கொழும்பு புறநகரில் நடந்த பயங்கர கொலை – காரணம் வெளியானது

நபரொருவரின் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

49 வயதுடைய  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபருக்கும் அவரது மனைவிக்கும் 15 வருடங்களாக தொடர்பு இருப்பதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் தன்னுடன் இருப்பார் என்ற சந்தேகத்தில் தான் இந்தக் கொலையை செய்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமக்கு 24 மற்றும் 17 வயதுடைய இரண்டு மகள்கள் இருப்பதாகவும், சமூகத்தின் அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் தான் இந்த குற்றத்தை திட்டமிட்டதாகவும் சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், பெல்லந்தரை சந்தி பகுதியில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்து சென்று பொரலஸ்கமுவ, தேவலமுல்ல பிரதேசத்தில் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கொலையை செய்துவிட்டு தப்பிச் செல்லும் போது தனது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாகவும்,  சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கடந்த 2ஆம் திகதி இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content