திருகோணமலையில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது!
திருகோணமலை- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாமல்வத்த பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது இன்று (19) இடம்பெற்றுள்ளது.
13 வதுடைய சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் மாமன் முறையான 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





