இலங்கையில் தெரு நாய் கடித்ததால் உயிரிழந்த சிறுமி!

இலங்கையில் தெரு நாய் கடித்ததில் நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் சிறுமியை இந்த நாய் கடித்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ரேபிஸ் தடுப்பூசியோ அல்லது தேவையான மருத்துவ சிகிச்சையோ பெற்றோர்கள் அவருக்கு வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சில தினங்களின் பின்னர் திடீரென சுகவீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி நேற்று (27) உயிரிழந்துள்ளார்.
நாய் கடித்ததால் சிறுமி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த நாயினால் கடித்த மேலும் நால்வர் வைத்திய சிகிச்சைக்காக சென்றுள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டாவளை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 23 times, 1 visits today)