இலங்கை

இலங்கையில் தெரு நாய் கடித்ததால் உயிரிழந்த சிறுமி!

இலங்கையில் தெரு நாய் கடித்ததில் நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் சிறுமியை இந்த நாய் கடித்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ரேபிஸ் தடுப்பூசியோ அல்லது தேவையான மருத்துவ சிகிச்சையோ பெற்றோர்கள் அவருக்கு வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சில தினங்களின் பின்னர் திடீரென சுகவீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி நேற்று (27) உயிரிழந்துள்ளார்.

நாய் கடித்ததால் சிறுமி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த நாயினால் கடித்த மேலும் நால்வர் வைத்திய சிகிச்சைக்காக சென்றுள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டாவளை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 32 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்