இந்தியா

விரைவு ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த BJP-யின் முன்னாள் தலைவர்

விரைவு ரயிலின் குளிர்சாதன பெட்டியில் பாஜக முன்னாள் தலைவர் ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய தலைநகர் டெல்லியிலுள்ள ராஜேந்திர நகர் முனையத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மேர் சந்திப்பு வரை லியாரத் விரைவு ரயில் செல்கிறது.

இந்த ரயிலில், பீகார் மாநிலத்தின் பாக்ஸார் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் ராணா பிரதாப் சிங் பயணம் செய்துள்ளார். இவர், தனது நண்பர்களுடன் இந்த விரைவு ரயிலில் உள்ள முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துள்ளார்.

https://twitter.com/i/status/1713130928640274749

பின்பு, ரயிலில் டிக்கெட் பரிசோதகர் வந்து டிக்கெட்டை காண்பிக்குமாறு பாஜக முன்னாள் தலைவரிடம் கூறுகிறார். அதற்கு அவர் பரிசோதகரை மிரட்டும் தொனியில் பேசுகிறார்.மேலும், என்னை நீ திருடன் என்று சொல்கிறாயா, என்னை பார்த்தால் திருடன் போல் தெரிகிறதா என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு, நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்கள் என அவர் சொல்கிறார்.

இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!