ஸ்பெயினில் இரவு விடுதியில் தீவிபத்து : 09 பேர் பலி!

தென்கிழக்கு ஸ்பெயினில் உள்ள முர்சியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (01.10) அதிகாலையில் டீட்டர் இரவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது என Xஇல் பதிவிடப்பட்டுள்ளது.
இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளதுடன், மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று முர்சியாவின் அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.
தீயினால் கூரையின் ஒரு பகுதி எரிந்து நாசமாகியுள்ள காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. முர்சியா நகர மேயர் ஜோஸ் பலேஸ்டா, தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)