செய்தி தமிழ்நாடு

உயிர் போகும் தருவாயிலும் மற்ற உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்

உயிர் போகும் தருவாயிலும் மற்ற உயிரை ஓட்டுநர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் பகுதியை சேர்ந்த மலையப்பன் ஒரு தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக உள்ளார்.

இவர் பள்ளி வாகனம் ஒட்டும்போது திடிர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது மிகவும் சிரமப்பட்டு பள்ளி வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டீரிங்கின் மீது மயங்கி சரிந்துள்ளார்.

மலையப்பனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பள்ளி வாகனத்தை, சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி சமயோசிதமாகச் செயல்பட்டு மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

(Visited 19 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!