இந்தியா

இந்தியாவில் பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து – 24 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

வட இந்தியாவில் பயணிகள் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து இன்று (04.11) விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பகுதியான அல்மோரா மாவட்டத்தில் இருந்து பயணித்த குறித்த பேருந்தில் நாற்பதிற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் இருந்து இதுவரை 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று மாநில அரசு அதிகாரி வினீத் பால் தெரிவித்தார்.

இன்னும் உள்ளே சிக்கியிருக்கும் பயணிகளை மீட்க மீட்பு மற்றும் நிவாரணப் பணியாளர்கள் குழுக்கள் தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!