May 16, 2025
Breaking News
Follow Us
ஐரோப்பா

ஐரோப்பிய நாட்டிற்கு 200 பேருடன் சென்றுகொண்டிருந்த படகு மாயம்

ஸ்பெயினை நோக்கிச் சென்ற ஒரு படகைக் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆப்பிரிக்காவில் இருந்து சென்ற படகே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்பெயினின் கெனரி (Canary) தீவுகளை நோக்கிச் சென்ற அந்தப் படகில் குறைந்தது 200 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது.

ஆப்பிரிக்காவின் செனகல் (Senegal) நாட்டில் இருந்து ஸ்பெயினை நோக்கிக் கடந்த மாதம் 27ஆம் திகதி அந்தப் படகு புறப்பட்டது.

படகில் ஏராளமான சிறுவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதே போன்ற மேலும் இரண்டு படகுகளையும் காணவில்லை.

கடந்த ஆண்டு அதுபோல் ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினுக்குச் சாதாரண மீன்பிடிப் படகுகளில் செல்ல முயன்றவர்களில் சுமார் 560 பேர் உயிரிழந்துள்ளனர்.

முந்திய ஆண்டில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர் என்று உலக நிறுவனம் சொல்கிறது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்