இலங்கை

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த 09 வயது சிறுமி!

இலங்கையில் 09 வயதுடைய சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹலவத்த, இரணைவில பிரதேசத்தை சேர்ந்த 9 வயதுடைய ஷலனி ரிதுஷா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலத்தை பக்கத்துவீட்டு பெண், பார்ததாகவும், பின்னர் குறித்த சிறுமியின் தந்தைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஷாலனியின் தாயார் பொருளாதார நெருக்கடியால்,  சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு குவைத் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஹலவத்த, இரணைவில பிரதேசத்தில் இருந்து பதிவாகிய சிறுமியின் மரணம் தொடர்பில் முதற்கட்ட நீதவான் விசாரணையும் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையும் இன்று (12.08) காலை இடம்பெற்றது.

இதேவேளை,  இது கொலையா அல்லது தற்கொலையா என மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!