இலங்கை

இலங்கையில் நீரோடைக்குள் தவறி வீழ்ந்து 4 வயது சிறுமி பலி!

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யோகியான, வேகட பிரதேசத்தில் நான்கு வயதுடைய அனன்யா பாரமி என்ற சிறுமி, செவ்வாய்க்கிழமை (08) பிற்பகல் தனது வீட்டின் பின்புறம் உள்ள பாதுகாப்பற்ற ஓடைக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

முன்பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த சிறுமியை குளிப்பாட்டுவதற்காக அவரது பாட்டி தண்ணீர் சுடவைப்பதற்காக சென்றபோது, ​​சிறுமி ஓடைக்குள் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது உயிரிழந்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்