இலங்கை செய்தி

கிணற்றில் தள்ளி கொல்லப்பட்ட 10 வயது சிறுமி

சிறுமி ஒருவர் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள நோன்ரா கிராமத்தில் பதிவாகியுள்ளது.

10 வயது சிறுமி கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் நேற்று (20ம் திகதி) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், சிறுமியை பிரதேசவாசிகள் கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரியா என்ற 10 வயது சிறுமி துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக சந்தேகத்திற்கிடமான பெண் தனது பேத்தியை கிணற்றில் தள்ளி கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் பாட்டி சுதாமா என்ற 50 வயதுடைய பெண் ஆவார்.

குறித்த பெண் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை