உலகம் செய்தி

முஸ்லிம் குடும்பத்தை கொன்ற கனேடிய வெள்ளை மேலாதிக்கவாதிக்கு ஆயுள் தண்டனை

ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வேண்டுமென்றே வாகனத்தை ஒட்டிய கனேடிய வெள்ளை மேலாதிக்கவாதி ஒருவருக்கு கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

23 வயதான நத்தனியேல் வெல்ட்மேன் கனடாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தாக்குதலுக்கு நான்கு முதல் நிலை கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக நவம்பர் மாதம் தண்டிக்கப்பட்டார்.

46 வயடன் சல்மான் அப்சால்,இவரது மனைவி 44 வயதான மதீஹா சல்மான், இவர்களது 15 வயது மகள் யும்னா மற்றும் 74 வயதான அப்சலின் தாயார் தலாத் கொல்லப்பட்டனர்.

தம்பதியின் ஒன்பது வயது மகன் பலத்த காயங்களுக்கு உள்ளானான், ஆனால் உயிர் பிழைத்தான்.

தாக்குதலின் போது, ஒன்ராறியோவின் லண்டன் நகரத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு அருகில் நடந்து செல்வதற்காக குடும்பத்தினர் வெளியே சென்றுள்ளனர்.

இந்த வழக்கின் நீதிபதி, வெல்ட்மேனின் தாக்குதல் பயங்கரவாதச் செயலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறினார், இந்த வார்த்தை வெள்ளை தேசியவாத வன்முறையை விவரிக்க முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது.

“குற்றவாளியின் நடவடிக்கைகள் பயங்கரவாதச் செயலாக இருப்பதை நான் காண்கிறேன்” என்று ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ரெனி பொமரன்ஸ் வியாழன் அன்று இந்தத் தண்டனையில் கூறினார்.

(Visited 18 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி