கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை
யாழ்ப்பாணம் பிரதான வீதியை மறித்து கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் 05 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் குறித்த 05 மாணவர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமை, ஊடக சுதந்திரத்தில் தலையிடுதல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கண்டன ஊர்வலத்தில் இலங்கைத் தமிழர் அரசு கட்சியின் புதிய தலைவர் எஸ்.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் குழுவும் இணைந்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





